Friday, April 30, 2010

போட்டிக்கு பிள்ளை :)

ஹ்ம்ம்ம்.....எல்லாருக்கும் வணக்குமுங்கோ.....ஆமாம் நானும் blogikaraen :) எல்லாரும் கருத்த பரிமாரரேனு எழுதறாங்க, சரி நாமளும் எழுதலாம்னு ஒரு எண்ணம் வந்திருச்சு. இது என்னோட 2 வது முயற்சி. இதை யாரு படிக்கப் போறாங்கன்னு தெரியாது, But நிச்சயமா நெருங்கிய நண்பர்கள் ஒரு முறையாச்சு படிப்பாங்கன்னு ஒரு அசட்டு நம்பிக்கை. என்னோட ஒவ்வொரு முயற்சிகளிளையும் நம்ம சகாக்கள் நல்ல criticaa இருந்திருக்காங்க. இந்த ப்ளாக் விஷயத்துலயும் அப்பப்ப உசுபேத்தி, கண்டிச்சு, கலாய்ச்சு நிறைய எழுதவைங்கப்பா!!!!

சரி, ப்ளாக் ஆரம்பிச்சாச்சு எதை பற்றி எழுதறது??? வழக்கம் போல முக்கால்வாசி மக்கள் மாதிரி நானும் காதல் காதல் காதல்னு எழுதவா? இல்ல என்னோட கற்பனை கதைகள்......(ஐயோ அம்மான்னு அலறர்து எனக்கு கேட்குது :) )....ஓ.கே நான் கவிதை மட்டும் இப்போதைக்கு எழுதல :).... கவிதைங்கற பேருல "உன் மேல பூ விழுந்தா என்னால் தாங்க முடியாது" "உன் கண்ணுல தூசி விழுந்துசுனா பூமி இருண்டு போச்சு", "நீ என்னை பிரிந்தால் நான் நடக்கும் கோமா நோயாளி ஆவேன்" அப்படினுலாம் எழுதனும்...இல்ல இல்ல முயற்சி செய்தால் மார்கபந்து...ச்சி, ச்சி மார்கமுண்டு. ஸ்ரீகூட பாரதி, கண்ணதாசன், வாலி, வைரமுத்து மாதிரி எழுதலாம், மு.ய.ற்.சி செய்தால்! நான் தமிழ் வெண்பா சாகறதுக்குள்ள எழுதனும்னு ஒரு பேராசை உண்டு! நிறைய பேர் "வென்பானா" T.Rajendar போல rhymesnu யோசிக்கரோம்ல ....எனக்கும் வென்பானா என்னனு தெரியாது, மனசுல தோணிச்சு எழுதிட்டேன். இனிமேதான் Google செஞ்சு அத கத்துக்கணும்.

ஓகே ஓகே, தலைப்பு வெச்சுட்டேன், அது சம்பந்தமா ஏதாச்சு எழுதனுமே!. S.Ve.Sekar சம்பந்தமே இல்லாம "காத்துல மழை, காத்துல மழைன்னு" நாடகத்து நடுவில் கத்துவார். நாடகம் பேரு dialogla வரணுமாம். அதான் இப்போ நினைவுக்கு வருது. இந்த தலைப்பு ஏன் வெச்சேன்னு எனக்கு மறந்து போச்சு. அடுத்த முறை எல்லாத்தையும் எழுதிட்டு டைட்டில் வெக்கணும். Blog#2 கற்றுக்கொண்ட பாடம் !!!

படிப்பு, வேலைக்கு அப்பாற்பட்டு நான் எழுதிய தருணங்களை யோசிச்சு பார்கிறேன். சிறுவர்மலர், கன்னித்தீவு, அம்புலிமாமா, Tinkle என படித்து கொண்டிருந்த வேலை. நானும் கதை எழுதறேன் என்று கதை எழுதி அனுப்பினேன். எதுவுமில்ல நம்ம Harry Potter, அலாவுதீன் அற்புத விளக்கு பாணியில் ஒரு மாயஜால கதை. கதை அனுப்பிய பிறகு என்னோட கதை ஏதாவது ஒரு வாரம் வரும் என்ற ஆவல், ஏமாற்றம், அடுத்த வாரம் போடுவார்கள் என்ற நம்பிக்கை என மூன்று மாதம் கடந்தது...பிறகு நானும் என்னுடைய கதையை மறந்து போயாச்சு.

பின்பு ஒரு நாள் வீட்டிற்கு ஒரு பெரிய பார்சல் வந்தது....தமிழ் பட ஹீரோக்கு நடப்பதுபோல என்னோட கதை முதல் பரிசெல்லாம் வாங்கவில்லை. என்னோட அபரீதமான கற்பனைக்கு கார்டூன் வரைவது கஷ்டம் என்பதால் கதை publish பண்ண முடியவில்லை என்று அங்கிள் பை (Editor) லெட்டர் எழுதி அனுப்பினார். கூடவே நீ முயற்சி செஞ்சா நல்ல எழுத்தாளர் ஆவ அப்படின்னு சொல்லியிருந்தார். நிறைய கதை புத்தகங்கள் பரிசாக அனுபியுமிருந்தார். அன்று முழுதும் என் அப்பா அம்மாவின் முகத்தில் தெரிந்த ஆனந்தம் இன்றளவும் எனது நினைவில் உலவிகொண்டிருகிறது.

அதன் பின்பு பதினான்கு வருடம் கழித்து திரும்ப எழுதனும் என்கிற ஆசை. Orkut Communityil எழுதி நண்பர்களை படிக்க சொல்லி தொல்லை கொடுத்திருக்கிறேன் ... இப்போ Blog! மக்களே நீங்க அழிஞ்சீங்க!!! எனக்கு சாதகமா இருக்கற ஒரே விஷயம் Blogspotil அங்கிள் பை போல எடிட்டர் நான் எழுதறத publish பண்ணாம தடுக்க முடியாது :)...இன்னொன்னு இத விட கண்றாவியான ப்லோக்லாம் நான் படிச்சிருக்கேன், நீங்களும் படிச்சிருப்பீங்க:)...

கிறுக்கல்கள் தொடரும் !!!

6 comments:

  1. Good try Sri :)

    Unkitaendhu innum neriya yedhirpaakrom :))

    ReplyDelete
  2. mamaaaaaaaaa unnakula ippadi oru kirukkannai ithan naal eppadida marachi veche???

    nee ndathu raasa nadathu!!

    ReplyDelete
  3. kalakkunga srikanth!!! kirukkalgal thodaratum, vazhthukkal!

    ReplyDelete
  4. அன்புள்ள ஸ்ரீ,

    எங்க எல்லாரையும் நல்லா படிச்சு இங்க நல்லாவே எழுதியிருகீங்க நண்பா...

    உங்கள் பதிப்புகளை தொடருங்கள்... வாழ்த்துகள்...


    நட்புடன்,
    வாசன்.

    ReplyDelete
  5. Vaazhtiya nal ullangal athanai perukum en nanri nanri nanri....kavala padaatheenga ungala pathilaam blogikaraen

    ReplyDelete